நூற்றாண்டுகளுக்கு முன்னால் ஆற்றுக்கால் பகுதியில் வாழ்ந்து வந்த முல்லை வீட்டு குடும்பத்தலைவர் பரமபக்தர் ஒருவர், கிள்ளியாற்றில் கீழ் படித்துறையில் ஆற்றில் நீராடி மாலை ஜெபத்தை முடித்து வீடு திரும்ப இருந்த வேளையில், முதியவரை மறுபக்கம் ஆற்றின் கரையிலிருந்து முன்பின் பழக்கமில்லாத அழகிய வடிவம் கொண்டு ஒரு சிறுமி அழைத்து தன்னை மறுகரையில் கொண்டு விடும்படி கேட்டுக்கொண்டாள்.
சிறுமியை தோளில் ஏற்றி கரைக்கு அழைத்து வந்த முல்லை வீட்டுப் பெரியவர், சிறுமியை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிறுமிக்கு விருந்து படைக்க புதுப்பானையில் அரிசியும் தேங்காய் துருவலையும் போட்டு பொங்கல் தயாரித்ததாக கூறப்படுகிறது. பொங்கல் படையலுடன் வந்த போது அந்த இடத்தில் சிறுமியை காணவில்லை. மனமுடைந்து கண்ணீர் வடித்துக் கலங்கி தளர்வு கொண்டு மயங்கி நித்திரையிலாழ்ந்து விட்டார். கனவில், சிறுமி தேவி வடிவில் காட்சியளித்தாள்.
மறுநாள் கனவில் கூறியபடி தன் தோட்டத்தில் மூன்று கோடுகளை கண்ட பெரியவர், அங்கு தேவியின் சிலையை நிறுவி வழிபட்டதாக கதை கூறுகிறது.
தேவிக்காக பெரியவர் தயாரித்த பொங்கல் படையலின் நினைவாக தற்போது லட்சக்கணக்கான பெண்கள் பொங்கல் நைவேத்தியம் படைக்கின்றனர்.
0 comments:
Post a Comment